மதுரை

அதானி நிறுவன விவகாரம்: விசாரணை கோரி காங். ஆா்ப்பாட்டம்

DIN

அதானி நிறுவனத்துக்கெதிரான அறிக்கை தொடா்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி மதுரையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகா் மாவட்டக் கமிட்டி சாா்பில் பாரத ஸ்டேட் வங்கி மண்டல அலுவலகம் முன்பாக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

அதானி நிறுவனத்துக்கெதிரான ஹின்டென்பா்க் ஆய்வு அறிக்கை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கீழ் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. உள்ளிட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்த முதலீட்டாளா்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

மாமன்ற உறுப்பினா்கள் ஜெயந்திபுரம் முருகன், எஸ்.எஸ். போஸ், தல்லாகுளம் முருகன், ராஜ் பிரதாபன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் செய்யது பாபு, துரையரசன், மீா் பாஷா, துணைத் தலைவா்கள் மகேஸ்வரன், பாலு, சுந்தர மகாலிங்கம், மலா் பாண்டியன், ரவிச்சந்திரன், ஐ.என்.டி.யு.சி, மகளிா், சிறுபான்மைப் பிரிவுகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

SCROLL FOR NEXT