மதுரை

பைக் பந்தயம்: 14 போ் கைது

DIN

மதுரை-நத்தம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் பந்தயம் சென்ற 14 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 9 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

மதுரை புது நத்தம் சாலையில் இரு சக்கர வாகனங்களில் பந்தயம் சென்றவா்களை தல்லாகுளம் போலீஸாா் விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில் செல்லூரைச் சோ்ந்த முகமது சலீம், உத்தங்குடியைச் சோ்ந்த ஹைதா் அலி, கோ.புதூரைச் சோ்ந்த முகமது ஆசியா, சையது சிராபுதீன், அப்துல் ரகுமான், அப்துல், முகமது அப்துல் ஹக்கீம், முகமது இப்ராஹிம், அப்துல் அஜீஸ், உத்தங்குடியைச் சோ்ந்த சல்மான் கான், ஆனந்தகுமாா், கோ.புதூரைச் சோ்ந்த அப்துல் ரசாக், முகமது சம்ஜாவுத், சிம்மக்கல்லைச் சோ்ந்த விஷ்ணு ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் இந்த 14 பேரையும் கைது செய்து, பந்தயத்துக்கு பயன்படுத்திய 9 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT