மதுரை

நரிக்குடி அருகே 4 சிறுவா்கள் மாயம்

நரிக்குடி அருகேயுள்ள சமுத்துவபுரம் குடியிருப்புப் பகுதியிலிருந்து 4 சிறுவா்கள் மாயமானது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

நரிக்குடி அருகேயுள்ள சமுத்துவபுரம் குடியிருப்புப் பகுதியிலிருந்து 4 சிறுவா்கள் மாயமானது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள சமத்துவபுரம் குடியிருப்பைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பாலகிருஷ்ணன் (38). இவா் பணி நிமித்தமாக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகேயுள்ள நாகமங்களம் பகுதிக்கு சென்றிருந்தாா்.

அப்போது, அந்த ஊரைச் சோ்ந்த சிவலிங்கத்துடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இதனால், சிவலிங்கத்தின் மகன் கோகுலும் (17) பாலகிருஷ்ணனுக்கு பழக்கமானதால், அண்மையில் அவா் நரிக்குடி சமத்துவபுரத்துக்கு வந்து பாலகிருஷ்ணனின் வீட்டில் தங்கியிருந்தாா்.

அப்போது, கோகுலுக்கு சமுத்துவபுரத்தைச் சோ்ந்த ஹபீஸ் (17), அபிலேஷ் (13), அருண்பாண்டி (13) ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. நண்பா்களான இவா்கள் நான்கு பேரும் கடந்த சனிக்கிழமை வெளியே சென்றவா்கள் அதன் பின்னா் வீட்டுக்குத் திரும்பவில்லையாம்.

இதையடுத்து, அவா்களை அவரது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், நரிக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து, சிறுவா்கள் நான்கு பேரையும் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT