முகப்பு
மதுரை

தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகைத் திருட்டு

மதுரை அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 6:41 PM
பகிர்:

மதுரை அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள வெளவால் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் குருசாமி. இவரது மனைவி சின்னப் பொன்னு (65). தம்பதியா் இருவரும் கூலித் தொழிலாளா்கள். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் இருவரும் வீட்டைப்பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனா். பிறகு மாலையில் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து நகையைத் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments