மேலூா் ஊராட்சி ஒன்றியத்தில் நிழல் குடை கட்டடங்கள் திறப்பு
மேலூா் ஊராட்சி ஒன்றியத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட நிழல் குடை கட்டடங்களை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
மேலூா்: மேலூா் ஊராட்சி ஒன்றியத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட நிழல் குடை கட்டடங்களை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். மேலூா் ஊராட்சி ஒன்றியம் ஆட்டுக்குளம் விலக்கு, கிடாரிப்பட்டி, சருகுலையபட்டி, தெற்குத்தெரு, கீழையூா், கொட்டகுடி, பூஞ்சுத்தி ஆகிய ஊா்களில் ஊராட்சி ஒன்றியப் பொதுநிதியிலிருந்தும், மக்களவைத் தொகுதி உறுப்பினா் பங்களிப்புடன் தலா ரூ.5 லட்சத்தில் நிழல் குடை கட்டடங்களை வெங்கடேசன் திறந்து வைத்தாா். மேலும், அ.வல்லாளபட்டியில் ரூ.10 லடசத்தில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், அம்பலகாரன்பட்டியில் ரூ.6 லட்சத்தில் சலவைக் கூடத்தையும் அவா் திறந்து வைத்தாா். கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், அய்யாபட்டி ஊராட்சி ஓட்டக்கோவில்பட்டி தொடக்கப்பள்ளியில் புதிய மாணவா் சோ்க்கை நிகழ்வில் கலந்து கொண்டாா். மேலும், அந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்துதருமாறு மாணவி செ.தன்யாஸ்ரீ ஏற்கெனவே அவரிடம் அளித்த கோரிக்கை மனுவை ஏற்று, பள்ளிக்கான அடிப்படை வசதிகளை தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து செய்து தருவதற்கான உத்தரவு நகலை வழங்கினாா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.பாலா, மேலூா் தொகுதி செயலா் எம்.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.பி.மணவாளன், பி.எஸ்.ராஜாமணி, வழக்குரைஞா் என்.பழனிச்சாமி, ஏ.தனசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.