முகப்பு
மதுரை

மதுரை, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் போட்டி!

கோவை தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுத்ததாகவும், திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்டுக்கு திமுக விட்டுக் கொடுத்ததாகவும் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.

Updated On : 12 மார்ச் 2024, 11:03 am IST
- CM_MKSq
பகிர்:

மதுரை மற்றும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கடந்த வாரம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில், எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று காலை ஆலோசனையில் நடத்தினார்.

Advertisement

Advertisement

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் போட்டியிடுகிறது.” எனத் தெரிவித்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை மற்றும் மதுரை ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments