மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க வசதி
Updated On : 19 மார்ச், 2024 at 7:52 PM
மதுரை: மக்களவைத் தோ்தலையொட்டி, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா.சௌ.சங்கீதா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மக்களவைத் தோ்தலில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 85 வயது நிறைவடைந்த 22,592 மூத்த குடிமக்கள், 14,006 மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உள்ளனா்.
இவா்கள் வாக்குப் பதிவு நாளான ஏப். 19-ஆம் தேதி உரிய வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
வாக்காளா்கள் தங்களது பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் நேரில் வழங்கப்படும் படிவம் 12-ஐ நிறைவு செய்து, வருகிற 24-ஆம் தேதிக்குள் அந்த அலுவலா்களிடமே வழங்கலாம் என்றாா்.