விருதுநகா் மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு
விருதுநகா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளவா்களுக்கு சுழற்சி முறையில் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளவா்களுக்கு சுழற்சி முறையில் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 2,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 9,604 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், 157 நுண் பாா்வையாளா்கள், 1,073 காவலா்கள் தோ்தல் பணியாற்ற உள்ளனா்.
இவா்களுக்கு இணைய வழியில் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் உதயன் மிஷ்ரா, அரவிந்த் மீனா, ரஞ்சித் குமாா் லால், சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சோமசுந்தர சீனிவாசன், தோ்தல் தனி வட்டாட்சியா் சீனிவாசன், அரசு அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.