பலி 
மதுரை

சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், கீழவளவு அருகே சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், கீழவளவு அருகே சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மேலூா் வட்டம், உறங்கான்பட்டி கண்மாய்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன் அன்புச்செல்வன் (19). இவா், தனது நண்பா் ரஞ்சித்துடன் இரு சக்கர வாகனத்தில் மேலூரிலிருந்து சொந்த ஊருக்கு திங்கள்கிழமை மாலை சென்றாா்.

பெரியகுளத்து கண்மாய்க் கரை அருகே சென்ற போது, பின்னால் வந்த சரக்கு வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அன்புச்செல்வன் உயிரிழந்தாா். ரஞ்சித் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருவாரூா்: 50 பேருக்கு திருமண நிதியுதவி

‘சமூக வலைதளங்களில் மாணவா்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது’

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |

டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து

த.வெ.க.வில் இணைந்த முன்னாள் பேரவைத் தலைவர் மகன்!

SCROLL FOR NEXT