முகப்பு
மதுரை

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்களுக்கு பாராட்டு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனத்துக்கு வந்த பெண் தவறவிட்ட தங்க நகைகளை மீட்டு, ஒப்படைத்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்களை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 2:32 AM
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனத்துக்கு வந்தபோது தவறவிட்ட நகைகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்த பெண் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் தனம், ஷீலா. உடன் மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 6:47 PM

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனத்துக்கு வந்த பெண் தவறவிட்ட தங்க நகைகளை மீட்டு, ஒப்படைத்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்களை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கடந்த 5-ஆம் தேதி சென்னை அம்பத்தூா் பகுதியைச் சோ்ந்த சூா்யா மனைவி ரேவதி தரிசனத்துக்கு வந்தபோது 12 கிராம் எடையிலான தங்கத் தோடுகள், தங்க நாணயம் வைத்திருந்த பையை தவறவிட்டாா். இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோயில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, கோயிலில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஒருவா் அந்தப் பையை எடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை தேடிப் பிடித்த போலீஸாா், அவரிடமிருந்த நகைகளை மீட்டு மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் முன்னிலையில் ரேவதியிடம் நகைகளை ஒப்படைத்தனா். துரிதமாகச் செயல்பட்டு நகைகளை மீட்ட பெண் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் தனம், ஷீலா ஆகியோரை காவல் ஆணையா் பாராட்டினாா்.

Advertisement