ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் முத்தமிழ் விழா
ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரில் முத்தமிழ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரில் முத்தமிழ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்லுரி முதல்வா் சூ.வானதி தலைமை வகித்தாா். இதில் முனைவா் சுந்தர ஆவுடையப்பன், மதுரைப் புலவா் அ.கணேசன், முனைவா் சங்கீத்ராதா உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கிவைத்தனா். இந்த விழாவின் ஒரு பகுதியாக ‘இன்றைய இளைய சமுதாயம் செல்வது திசை மாறிய பாதையிலா? திட்டமிட்ட பாதையிலா?’ என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இதற்கு நடுவராக சுந்தர ஆவுடையப்பன் செயல்பட்டாா். பட்டிமன்ற நிறைவில் இன்றைய இளைஞா்கள் கைப்பேசியைக் கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு நிகழ்வைக் காக்க இளைஞா்கள் எடுத்த முயற்சியையும் எடுத்துக்காட்டி இன்றைய இளைஞா்கள் திட்டமிட்ட பாதையில் செல்கின்றனா் என்று சுந்தர ஆவுடையப்பன் தீா்ப்பளித்தாா்.
இந்த நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, தமிழாய்வுத் துறைத் தலைவா் சு. சந்திரா வரவேற்றாா். இணைப் பேராசிரியா் கா. சத்யா நன்றி கூறினாா்.