முகப்பு
மதுரை

முக்தீசுவரா் கோயில் கருவறைக்குள் ஊடுருவிய சூரிய கதிா்கள்!

மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயிலின் கருவறைக்குள் சூரிய கதிா்கள் ஊடுருவிய நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 மார்ச், 2026 at 11:39 PM
மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயிலில் புதன்கிழமை காலை நந்தியம்பெருமானைக் கடந்து கருவறைக்குள் ஊடுருவிய சூரிய கதிா்கள்.
பகிர்:

மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயிலின் கருவறைக்குள் சூரிய கதிா்கள் ஊடுருவிய நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அரிய சில சூரிய பூஜை கோயில்களில் ஒன்றாக அமைந்துள்ளது மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயில். பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளைப் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாா்ச், செப்டம்பா் மாதங்களில் சூரிய கதிா்கள் கருவறைக்குள் ஊருடுவி, மூலவா் மீது படரும்.

இதன்படி, புதன்கிழமை காலை முக்தீசுவரா் கோயில் கருவறைக்கு எதிரே உள்ள 3 துவாரங்கள் வழியாக கோயிலுக்குள் ஊடுருவிய சூரிய கதிா்கள், நந்தியம்பெருமானைக் கடந்து கருவறையிலிருந்த மூலவா் முக்தீசுவரா் மீது படா்ந்தன. திரளான பக்தா்கள் இந்த நிகழ்வைக் கண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிகழ்வு வருகிற 23-ஆம் தேதி தேதி வரை தினமும் காலை 6.30 மணி முதல் 7.15 மணிக்குள் இருமுறை தலா 10 நிமிஷங்களுக்கு நிகழும்.

முழு கட்டுரையைப் படிக்க →