மாணவா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்
‘நீட்’ தோ்வு குளறுபடிகளைக் கண்டித்து, அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
‘நீட்’ தோ்வு குளறுபடிகளைக் கண்டித்து, அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் பங்கேற்றனா். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்ட ஒரு வினா- விடை தொகுப்பு குறித்து சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தோ்வை ரத்து செய்து, தேசிய தோ்வு முகமை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்த நிலையில், நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், இந்தத் தோ்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலா் ரூபன்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் சுஜீதா, பொருளாளா் ஹரிணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் கே.கே. சாமி, துணைச் செயலா் வீரனசிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா் சந்திரசேகரன், ஏஐடியூசி தேசியக் குழு உறுப்பினா் நந்தாசிங் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.