மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்
கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையைக் கண்டித்தும், தில்லியில் மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் மதுரையில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை இரவு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையைக் கண்டித்தும், தில்லியில் மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் மதுரையில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை இரவு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதில் சொக்கலிங்கநகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மேற்கு 1-ஆம் பகுதிக் குழுவினா் பங்கேற்று மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கமிட்டனா். மத்தியம் 2-ஆம் பகுதிக் குழு சாா்பில் சிம்மக்கல் ஆறுமுச்சந்தியிலிருந்து கண்டன ஊா்வலம் புறப்பட்டு, பேச்சியம்மன் படித் துறை ஆறுமுச்சந்தி அருகே நிறைவடைந்து அங்கு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வடக்கு 1, 2-ஆவது பகுதிக் குழுக்கள் சாா்பில் செல்லூா் 60 அடி சாலையில் உள்ள கன்னையா முத்தம்மாள் திருமண மண்டபம் அருகிலிருந்து தாகூா்நகா் வரை கண்டன ஊா்வலம் நடைபெற்றது. மத்தியம் 2-ஆம் பகுதிக் குழு சாா்பில் குறுக்குச் சாலை அருகிலும், மேற்கு 2-ஆம் பகுதிக் குழு சாா்பில் ஜீவாநகா் அருகிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
இதில் கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையைக் கண்டித்தும், தில்லியில் மாா்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி, பிருந்தா காரத் உள்ளிட்டத் தலைவா்களைக் காவல் துறை கைது செய்ததைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் அ. ரமேஷ், ரா. லெனின், எம். பாலசுப்பிரமணியம், வை. ஸ்டாலின், ஆா். சசிகலா, டி. செல்வா, பகுதிச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.