இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் இலவசப் பயிற்சி வகுப்பு தொடக்கம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் சார்பில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் சார்பில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். வங்கியின் நிதி ஆலோசகர் எஸ்.ராமச்சந்திரன், அலுவலர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் கருப்பையா தொழில் நேர்மை, சுயதொழிலுக்கு அரசு வழங்கும் கடனுதவிகள் குறித்துப் பேசினார். சுந்தரேசன் பயிற்சியளித்தார். 30 நாள்களுக்கு நடைபெறும் இப்பயிற்சி முடிந்தவுடன் வங்கிக் கடன் பெறுவதற்கு சான்றிதழ் வழங்கப்படும் என பயிற்சி மைய இயக்குநர் சியாமளாகுமார் தெரிவித்தார். பயிற்சியாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.