ராமநாதபுரம்

அபிராமம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை திருட்டு

DIN

கமுதி அருகே விவசாயி வீட்டின் பீரோவை உடைத்து 23 பவுன் நகையை கொள்ளையர்கள் செவ்வாய்கிழமை மாலை திருடிச் சென்றுள்ளனர்.
  ராமநாதபுர மாவட்டம் கமுதி அருகே அபிராமம் அடுத்துள்ள  உடையநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ஆறுமுகவள்ளி (34). இவர்களுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை வழக்கம்போல் கிருஷ்ணமூர்த்தியும், ஆறுமுகவள்ளியும் அருகில் உள்ள இவர்களது வயலுக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து  மாலை 6 மணிக்கு ஆறுமுகவள்ளி வீடு திரும்பிய போது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 23 பவுன் தங்க நகை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அபிராமம் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT