முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசுப் பள்ளி மாணவிகள் 2 ஆயிரம் பேருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசுப் பள்ளி மாணவிகள் 2 ஆயிரம் பேருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
   பெண்கள் தங்களை சமுகவிரோதிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையிலும், தன்னம்பிக்கையுடன் செயல்படுவதுடன், படிப்பில் ஆர்வம் செலுத்தும் விதமாக பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி அறிவுறுத்தலின்படி,  மத்திய அரசின் நிதியிலிருந்து அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 42 பள்ளிகளில் படிக்கும் 2 ஆயிரம் மாணவிகளுக்கு சிறந்த கராத்தே பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.    கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பயிற்சி பெற்ற மாணவிகளின் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். நடப்பு கல்வியாண்டில் செப்டம்பர் மாதம் தொடங்கி வாரம் இருமுறை என 5 மாதங்களுக்கு கராத்தே பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியினை அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் ஆர்.சுரேஷ்குமார் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பி.நாகராஜன், பி.ஆர்.பாஸ்கரன், மேற்பார்வையாளர் பி.பாண்டிமாதேவி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →