ராமநாதபுரம்

குடிசை எரிந்து சாம்பல்: மீனவப் பெண்ணுக்கு திமுக நிதி உதவி

DIN

ராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி ஒத்தப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை குடிசை எரிந்து சேதமடைந்ததையடுத்து அதில் வசித்த மீனவ பெண்ணுக்கு திமுக சார்பில் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
ராமேசுவரம்- தனுஷ்கோடி சாலையில் உள்ள ஒத்தப்பட்டி மீனவர் பகுதியில் முத்தம்மாள் என்பவரது வீடு திங்கள்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதில் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து விட்டன. இதுகுறித்து தனுஷ்கோடி காவல் நிலையத்தில் முத்தம்மாள் புகார் செய்துள்ளார். இந்நிலையில், முத்தம்மாளுக்கு திமுக நகர் முன்னாள் செயலர் அ.ஜான்பாய் ஆறுதல் கூறி ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அப்போது நகர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜாமணி, பாஸ்கரன், தனபால் தரக்குடியான் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை.. காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT