ராமநாதபுரம்

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சாயல்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்

DIN

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சாயல்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை   நடைபெற்றது.
 திமுக நெசவாளர் அணி சார்பில் நடைபெற்ற இப்போட்டியினை மாவட்ட செயலாளர் சுப.திவாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சின்ன மாடு, பெரிய மாடு என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
 இதில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 29 ஜோடி மாடுகள் பங்கேற்றன. 
 பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் காடமங்களம் மனோகரன் மாடு முதல் பரிசு பெற்றது. சின்ன மாட்டு வண்டிப் பந்தயத்தில் இருவேலி புல்லட் அலியார் மாடு முதல் பரிசை பெற்றது. போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு, ஊக்கத்தொகையை முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் வழங்கினார்.
 இதில், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஜெயபாலன், சாயல்குடி நகரச் செயலாளர் பி.பி.வெங்கடேஸ்வரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம்.பி.துரைச்சாமி உள்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT