ராமநாதபுரம்

ரெகுநாதபுரம் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு வழங்கல்

DIN

ராமநாதபுரம் அருகேயுள்ள ரெகுநாதபுரம் கூட்டுறவுச் சங்க நியாய விலைக்கடையில் சனிக்கிழமை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.ஜெயஜோதி தலைமை வகித்து குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். துணைத் தலைவர் நாகநாதன் முன்னிலை வகித்தார்.
விழாவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எஸ்.சௌந்தர்ராஜன், மாணிக்கம், குலாம் முகம்மது உள்பட கூட்டுறவு வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 342 பேருக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT