ராமநாதபுரம்

தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் பேருந்து கண்ணாடியை  சேதப்படுத்தியவர் கைது

DIN

பரமக்குடி பேருந்து நிலையத்தில் தந்தையிடம் ஏற்பட்ட தகராறில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள காமன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் கண்ணன்(33). இவர் தந்தையுடன் வெளியூர் செல்வதற்காக பரமக்குடி பேருந்து நிலையம் வந்துள்ளார்.
அப்போது தனக்கு செலவுக்குத் தனியாக பணம் தரவேண்டும் என கேட்டுள்ளார். அவர் கேட்ட பணத்தை அவரது தந்தை தர மறுத்ததால் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தின் மீது கல்வீசி தாக்கி, கண்ணன் ரகளையில் ஈடுபட்டார். இதில் அரசு பேருந்தின் முன்பக்க ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. 
இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் உரப்புளி கிராமத்தைச் சேர்ந்த ஆர்.லோகநாதன் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT