ராமேசுவரத்தில் ராஜீவ்காந்தி அறக்கட்டளை மற்றும் வர்த்தக காங்கிரஸ் சார்பில் ஞாயிற்றுக்கிழமை காமராஜரின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
இதற்கு வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஜோதிராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ண பெருமாள் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், நகர் தலைவர் ஜபார், மகளிர் காங்கிரஸ் தலைவர் நம்புத்தாய், செயலாளர் நாகலட்சுமி மற்றும் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பாபா செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.