ராமநாதபுரம்

வழக்குரைஞர் வீட்டில் திருட்டு

DIN

ராமநாதபுரத்தில் வழக்குரைஞரின் வீட்டுக்கதவை உடைத்து தங்கம், வெள்ளி பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் சேதுபதி நகர் வடக்கு 5 ஆவது தெருவில் வசித்து வருபவர் அழகர்சாமி (60). இவர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தற்சமயம் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாராம். இவர் வீட்டில் இல்லாத போது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து திறந்து தங்க நகைகள், வெள்ளி பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து அழகர்சாமி கேணிக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT