முகப்பு
ராமநாதபுரம்

வரி பாக்கி வைத்துள்ள ஹோட்டல்கள் முன்பு குப்பை தொட்டிகளை வைத்து சென்ற அதிகாரிகள்

ராமேசுவரம் நகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ள ஹோட்டல்கள் முன்பு வியாழக்கிழமை குப்பை தொட்டிகளை வைத்துவிட்டு நகராட்சி அதிகாரிகள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Updated On : 30 மார்ச், 2018 at 1:37 AM
பகிர்:

ராமேசுவரம் நகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ள ஹோட்டல்கள் முன்பு வியாழக்கிழமை குப்பை தொட்டிகளை வைத்துவிட்டு நகராட்சி அதிகாரிகள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
  ராமேசுவரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் இறுதிக்குள் 100 சதவீதம் வரியை வசூல் செய்ய நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தொடர்ந்து வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து பல ஆண்டுகளாக வரி பாக்கி வைத்துள்ள ஹோட்டல்கள், கடைகள் முன்பு வியாழக்கிழமை நகராட்சி குப்பை தொட்டிகளை அதிகாரிகள் வைத்துவிட்டு சென்றனர். இதனையடுத்து,  ஹோட்டகள் மற்றும் கடைகளை உரிமையாளர்கள் அடைத்தனர்.   பல ஆண்டுகாள தொடர்ந்து வரியை வசூல் செய்யாமல் இருந்துவிட்டு சில நாட்களுக்குள் ஒட்டுமொத்த வரியை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறி வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.