முகப்பு
ராமநாதபுரம்

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: 8 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்ற இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 15 மே, 2018 at 12:29 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்ற இந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தாது மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. இதில் அமைப்பின் மாவட்டச் செயலாளர் என்.ஏ.காதர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சண்முகராஜ் முன்னிலை வகித்தார். இவர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் கோஷமிட்டபடி வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் 8 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.