ராமநாதபுரம் ஆதிரெத்தினேசுவரர் கோயிலில் வைகாசித் திருவிழா: மே 20-இல் தொடக்கம்
ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் உள்ள சௌபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோயிலில் வைகாசித் திருவிழா வரும் 20 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.
ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் உள்ள சௌபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோயிலில் வைகாசித் திருவிழா வரும் 20 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.
விழாவை முன்னிட்டு தினமும் காலையில் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வருகின்றனர். வரும் 25 ஆம் தேதி அம்மன் தபசுக் கோலமும், 26 ஆம் தேதி சௌபாக்கியநாயகிக்கும், ஆதிரெத்தினேசுவரருக்கும் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
27 ஆம் தேதி திருமணக் கோலத்தில் பட்டுப்பல்லக்கில் வீதியுலாவும், இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
28 ஆம் தேதி தேரோட்டமும், 29 ஆம் தேதி தீர்த்தவாரியுடனும் விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபையின் தலைவர் பா.மோகன் தலைமையில் சபை நிர்வாகிகள், கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ்.ஜெயக்குமார், விழாக்குழுத் தலைவர் எஸ்.என்.மனோகரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.