அறிவார்ந்த சென்னை ரசிகர்கள்..! தோல்வியிலும் நெகிழ்ச்சியாகப் பேசிய கொல்கத்தா ரசிகர்!
சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற கொல்கத்தா ரசிகரின் பதிவு குறித்து...
சேப்பாக்கத்தில் நேற்றிரவு (ஏப்.14) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிக்குப் பிறகு, கொல்கத்தா அணியின் ரசிகர்கள் பலர் சென்னை ரசிகர்களை வெகுவாகப் பாராட்டி பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 192/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 160/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. 32 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.
Advertisement
இந்தப் போட்டிக்குப் பிறகு கொல்கத்தாவில் இருந்து வந்த ரசிகர்கள் பலர் சிஎஸ்கே ரசிகர்களின் நடத்தைகள் குறித்து நல்ல முறையில் பேட்டியளித்திருந்தார்கள். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கேகேஆர் ரசிகர் ஒருவர் பதிவிட்டிருப்பதாவது:
போட்டிக்குப் பிறகு எனக்கு ஆதரவு அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு நன்றி. நான் சிறிது உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. அடுத்த போட்டியில் பார்ப்போம்.
போட்டியில் தோற்றாலும் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். நன்றி சென்னை மக்களே! வெற்றியிலும் தோல்வியிலும் எனது விஸ்வாசம் கொல்கத்தா அணிக்கு இருக்கிறது.
இந்தப் போட்டியில் சென்னை ரசிகர்கள் என் மனதை வென்று விட்டார்கள். என்னைப் பார்த்துக்கொண்டதற்கும் மரியாதை அளித்ததுக்கும் மிக்க நன்றி எனக் கூறியுள்ளார்.