திருவாடானை அருகே ஆற்றில் மணல் திருட்டு: 5 பேர் கைது, 6 வாகனங்கள் பறிமுதல்
திருவாடானை அருகே மங்கலக்குடி ஆற்றுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதியின்றி மணல் அள்ளிய வாகன ஓட்டுநர்கள் 5 பேரை கைது செய்த போலீஸார், 4 டிராக்டர்கள், ஒரு டிப்பர் லாரி, ஒரு பொக்லைன்
திருவாடானை அருகே மங்கலக்குடி ஆற்றுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதியின்றி மணல் அள்ளிய வாகன ஓட்டுநர்கள் 5 பேரை கைது செய்த போலீஸார், 4 டிராக்டர்கள், ஒரு டிப்பர் லாரி, ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மங்கலக்குடி ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக, திருவாடானை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
அப்போது, அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த மங்கலக்குடியைச் சேர்ந்த சதாம் உசேன் (27), நஷீர் (24), நெடுமரத்தைச் சேர்ந்த தாமஸ் (30), சம்பூரணியைச் சேர்ந்த பாலமுருகன் (24) மற்றும் திருவாடானை சமத்துவபுரத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (21)ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
மேலும், இவர்கள் மணல் அள்ளப் பயன்படுத்திய 4 டிராக்டர்கள், ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தப்பியோடிய பொக்லைன் இயந்திர ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.