முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

முதுகுளத்தூரில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

Updated On : 21 மே, 2018 at 11:49 PM
பகிர்:

முதுகுளத்தூரில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி வட்டார வள மைய மேற்பார்வையாளர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது. முதுகுளத்தூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சி குடியிருப்பு பகுதிகளில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள், பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கணக்கெடுத்து வருகின்றனர்.
அப்போது அனைத்து வார்டுகளிலும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு முன்னேற்றம் அடைய செய்வது, இலவச உபகரணங்கள் வழங்குவது, பகல் நேர காப்பகம் மூலம் பயிற்சி அளிப்பது, குழந்தைகளுக்கு கல்வி வளர்ச்சி முக்கியத்துவம் குறித்து வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் பெற்றோர்களிடம் எடுத்துரைத்தனர்.
பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தால் அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலர்கள் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் ( 97888 58877, 93843 35767) என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.