கமுதி பகுதியில் வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப் பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கமுதி அருகே கல்லுப்பட்டி பகுதியில் இருந்து மழை நீர், குண்டாற்றிக்கு வரும் வகையில் வரத்து கால்வாய் இருந்தது. ஆனால் அந்த வரத்து கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இதனால் சிறு மழை பெய்தாலே விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்குகிறது. எனவே கல்லுப்பட்டி சாலையிலிருந்து ஒற்றைக்கண் பாலம் வரை உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.