ராமநாதபுரம்

பூப்பந்தாட்டப் போட்டியில் 2 ஆவது பரிசு: நம்புதாளை  பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

DIN

மாவட்ட அளவில் நடைபெற்ற பூப்பந்தாட்ட போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற  நம்புதாளை அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
திருவாடானை அருகே நம்புதாளையில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. 
இந்த போட்டியில் நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, மாவட்ட அளவில் இரண்டாம் பரிசை பெற்றனர். அவர்களுக்கு நம்புதாளை அரசு உயர்நிலைப்பள்ளியில்  தலைமை ஆசிரியர் ஆத்மநாபன் தலைமையில் வெள்ளிக்கிழமை பாரட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு உடற்கல்வி ஆசிரியர் வின்சென்ட் சேவியர், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் செய்து யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT