திருவாடானையில் பாலத்தில் மண் அரிப்பு
திருவாடானையில் பேருந்து நிலையம் அருகே உள்ள மூன்று கண் பாலத்தின் பக்கவாட்டில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாடானையில் பேருந்து நிலையம் அருகே உள்ள மூன்று கண் பாலத்தின் பக்கவாட்டில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாடானையில் பேருந்து நிலையம் அருகே மணிமுத்தாறு பாலம் உள்ளது. தொண்டி, மதுரை, திருச்சி, ராமேசுவரம், ஓரியூர், பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தப் பாலம், கடந்தாண்டு மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளின் போது விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது பராமரிப்பின்றி இருப்பதால், இந்தப் பாலத்தின் பக்கவாட்டில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் மண் அரிப்பை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.