ராமநாதபுரம்

திருவாடானை அருகே தண்ணீர் தேடி வந்த மான் நாய்கள் கடித்து பலி

DIN

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே  நாய்கள் கடித்ததால் உயிரிழந்த மானை செவ்வாய்க்கிழமை  வனத் துறையினர் மீட்டு  உடற்கூறு ஆய்விற்கு பின் புதைத்தனர்.         
திருவாடானை அருகே அஞ்சுகோட்டை, செங்கமடை, சிறுகம்பையூர், மணிமுத்தாறு, வரத்து கால்வாய்கள் மற்றும் பெரியகண்மாய்  பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் காட்டு கருவேல மரக்காடுகள் உள்ளன. இதில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. 
இப்பகுதியில் கடந்த நான்கு வருடங்களாக போதிய மழையின்றி கண்மாய்கள், குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. அதனால் இப்பகுதியில் இருந்து மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அஞ்சுகோட்டை கிராமத்திற்குள் தண்ணீர் தேடி வந்த மானை நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. 
பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், வனத்துறையினர் உயிரிழந்த மானை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர்.
இதேபோல்  இப்பபகுதியில் மான்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT