ராமநாதபுரம்

குடிநீருக்கு 1 கி.மீ. அலைந்து தவிப்பு: ஆட்சியரிடம் கிராம பெண்கள் மனு

DIN

சின்னபாளையரேந்தலில் குடிநீருக்காக தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் அலைந்தும் போதிய தண்ணீர் கிடைக்காததால் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனர். 
கீழக்கரை அருகில் உள்ள சின்னபாளையரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலக குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்தனர். அவர்கள் ஆட்சியரைச் சந்தித்து அளித்த மனு விவரம்: 
சின்னபாளையரேந்தல் கிராமத்தில் 200 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகிறோம்.
எங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நான்கு மாதங்களுக்கு முன்பே வற்றிவிட்டது. அரசு சார்பில் கிராமத்தில் உள்ள 40 வீடுகளுக்கு மட்டும் தலா 2 குடம் என்ற அளவில் தண்ணீர் வழங்குகின்றனர். ஆனால் அந்தத் தண்ணீர் பயன்பாட்டுக்கு போதியதாக இல்லை. 
கிராமத்திலிருந்து தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் அலைந்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் கசியும் நீரையே பிடித்து வரவேண்டியுள்ளது. கிராமத்தில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருவதால்  தண்ணீருக்காக பெருளவு நேரத்தைச் செலவிடமுடியவில்லை. 
அதேநேரத்தில் சின்னபாளையரேந்தல் அகஸ்தியர் கோயில் அருகில் குடிநீர் குழாய் அமைத்துத் தருமாறு ஏற்கெனவே கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT