ராமநாதபுரம்

சாயல்குடியில் கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சாயல்குடி பேருந்து நிலையத்தில்  பழுதடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை  சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DIN

சாயல்குடி பேருந்து நிலையத்தில்  பழுதடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை  சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாயல்குடி பேருந்து நிலையம், காமராஜர் சிலை எதிரில்  குற்றங்களை கண்காணிக்க காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 
தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து, பல மாதங்களாக செயல்பாடின்றி  காட்சிப் பொருளாக கிடக்கிறது. 
கேமாராக்கள்  செயல்பாடாமல் இருப்பதால் திருட்டு கும்பல் சந்தைக்கு வரும் பொதுமக்களிடம் தங்களது கை வரிசையை காட்ட வாய்ப்பு உள்ளது. 
மேலும் இரவு நேரங்களில் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். இதனால் பொதுமக்களின் நலன் கருதி செயல்பாடின்றி உள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT