ராமநாதபுரம்

சாயல்குடி அருகே மணல் திருட்டு: ஓட்டுநா் கைது; டிராக்டா் பறிமுதல்

DIN

சாயல்குடி அருகே மலட்டாற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்த டிராக்டரை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரையும் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மலட்டாறு பகுதியில் இரவு, பகலாக டிராக்டா் மூலம் மணல் திருட்டு நடைபெறுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பகலில் டிராக்டரில் மணல் ஏற்றி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சாயல்குடி சாா்பு-ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா், மலட்டாறு பகுதிக்குச் சென்றனா். அங்கு, போலீஸாரை கண்டவுடன், மணலை அள்ளிய நபா்கள் தப்பியோடிவிட்டனா்.

பின்னா், மணல் ஏற்றப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரான புரசங்குளம் கடலாடியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பாலமுருகன் (46) என்பவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT