திருவாடானை அருகே மகளை கடத்திச் சென்றவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாயார் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
திருவாடானை அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். இம்மாணவி திங்கள்கிழமை கல்லூரி சென்ற பின் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், மாணவியின் தாயார் திருவாடானை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகளை அதே ஊரைச் சேர்ந்த நாகநாதன் மகன் கவுதம் (20), கடத்திச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.