ராமநாதபுரம்

மதுரையில் மதுபானக் கூடத்தில்  ஓட்டுநர் கொலை: முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் இளைஞர் சரண்

DIN

மதுரை மதுபானக் கூடத்தில் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் மதுரை கீரைத்துறையை சேர்ந்த இளைஞர் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.
மதுரை. கோ. புதூர் அருகே அரசு மதுக்கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் சிவா (23) என்பவரை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. 
இது குறித்து கோ. புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து மதுக்கூட ஊழியர்கள் இதய ராஜா , காசாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர். 
இந்நிலையில் இக் கொலையில்  தொடர்புடைய  மதுரை கீரைத்துறையை சேர்ந்த நல்லுச்சாமி மகன் வெற்றிச்செல்வம் (22) என்ற இளைஞர், முதுகுளத்தூரில் நீதித்துறை நடுவர் ராமசங்கரன் முன்னிலையில் வியாழக்கிழமை சரணடைந்தார். இதையடுத்து நீதித்துறை நடுவர் உத்தரவின் பேரில் வெற்றிசெல்வம் மதுரை மத்திய சிறைக்கு போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் டெய்லர் ஸ்விஃப்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு!

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

SCROLL FOR NEXT