ராமநாதபுரம்

திருவாடானை, மானாமதுரை கோயில்களில் பிரதோஷ வழிபாடு

DIN

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதேபோல் தொண்டி சிவன் கோயிலில் நந்தி பகவானுக்கு பால், சந்தனம், தயிர், பன்னீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
நம்புதாளை நம்புகேஸ்வரர் கோயில், ஆர்.எஸ்.மங்கலம் சிவன் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரினம் செய்தனர்.
மானாமதுரையில்: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் சுவாமி கோயிலில் நந்தி பகவானுக்கு 16 வகை பொருள்களால் அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சோமநாதர் சுவாமிக்கு தெய்வசிகாமணிப் பட்டர் சிறப்பு பூஜை நடத்தினார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானையும் சோமநாதர் சுவாமியையும் வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐந்தாண்டு சட்டப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா நிறைவு

ஒலிம்பிக் அகாதெமிக்கு இடம் தோ்வு செய்யும் பணி

இளைஞா் குத்திக் கொலை பெண் உள்பட 4 போ் கைது

சிதம்பரம் கோயிலில் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை? உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT