முன்னாள் படை வீரர்களுக்கு இன்று குறைதீர் முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (ஜன.23) மாலை நடைபெறுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு ஆட்சியர் தலைமை வகிக்கிறார். எனவே கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் கோரிக்கை மனுக்கள் இரண்டு பிரதிகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.