திருவாடானை அருகே நம்புதாளை காட்டு பகுதியில் மர்ம நபர்களால் வைக்கப்பட்ட தீயால் 10-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து சேதமாகின.
திருவாடானை தாலுகா தொண்டி அருகே நம்புதாளை பல்லாக்கு ஒலியுல்லா தெருவில் வீடுகளுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் பனைமரங்கள் உள்ளன. இந்த பனைமரங்களில் வெள்ளிக்கிழமை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென எரிந்ததை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை
அணைத்தனர். இதில் 10-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. மேலும், அருகே இருந்த குடிசை வீடு ஒன்றிலும் தீப்பரவியது. இதனால் வீடும் சிறிது சேதம் அடைந்தது.