ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 13,030 மெட்ரிக் டன் "அம்மா' சிமென்ட் விற்பனை: ஆட்சியர் தகவல்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 13,030.85 மெட்ரிக் டன் அம்மா சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா சிமென்ட் திட்டம்  கடந்த 2015 ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ராமநாதபுரம், ராமேசுவரம், கடலாடி, திருவாடானை, கமுதி, முதுகுளத்தூர், கீழக்கரை மற்றும் பரமக்குடி ஆகிய 8 இடங்களிலும் சிமென்ட் விற்பனை நடந்தது. 
மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் வாயிலாக மண்டபம், போகலூர், திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் நயினார்கோவில் ஆகிய 5 இடங்கள் என மொத்தம் 13 இடங்களில் அம்மா சிமென்ட் விற்பனை நடைபெற்றது. 
அதனடிப்படையில்   ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகள் வரை 13,030.85 மெட்ரிக் டன் அளவுக்கு சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT