ராமநாதபுரம்

சாயல்குடியில் கட்டட  ஒப்பந்ததாரரிடமிருந்து ரூ.56 ஆயிரம் பறிமுதல்

DIN

சாயல்குடி பகுதியில் கட்டட ஒப்பந்ததாரரின் காரில் இருந்த ரூ. 56 ஆயிரம் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். 
      ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தொண்டி கிழக்கு கடற்கரைச் சாலை புதுப்பட்டி பகுதியில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.     அப்போது, நம்புதாளையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த காரை சோதனையிட்டனர். அதில், ரூ. 56 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது.      விசாரணையில், காரில் வந்தவர் கட்டட ஒப்பந்ததாரர் பிரபு என்பதும், அவரிடம் பணத்துக்குரிய ஆவணம் இல்லை என்பதும் தெரியவந்தது. அதையடுத்து, பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.      இதேபோல், பரமக்குடி பகுதியிலும் செவ்வாய்க்கிழமை நடந்த வாகனச் சோதனையில், நான்கு பேரிடமிருந்து ரூ. 4 லட்சம் பிடிபட்டதாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

SCROLL FOR NEXT