ராமநாதபுரம்

அனைத்து  மகளிர் காவல் நிலையத்துக்குள் புகுந்து மிரட்டல்: இளைஞர் கைது

DIN

திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
திருவாடானை அருகே அருனூற்றி மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் பிரசன்னா (31). இவர் செவ்வாய்க்கிழமை இரவு திருவாடானையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ளே புகுந்து காவல் நிலையத்தை பார்த்து விட்டு வெளியில் வந்தார். அப்போது பணியில் இருந்து காவல் ஆய்வாளர் நர்மதா இதுகுறித்து கேட்ட போது, அவரை பிரசன்னா தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து காவல் துறை ஆய்வாளர் நர்மதா புகாரின் பேரில் பிரசன்னாவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT