ராமேசுவரம் ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ராமேசுவரம் ரயில் நிலையம் முன்மாதிரி ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ரயில் நிலையம் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை எனவும், நடைமேடைப் பகுதியில் போதிய மின் விளக்குகள் இல்லை எனவும் தொடர்ந்து பயணிகள் புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் லெனின் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் பயணிகளின் ஓய்வு அறைகள், குடிநீர் வசதிகள், கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பின்னர் பாம்பன் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.