ராமநாதபுரம்

பரமக்குடி பகுதியில் அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் அவதி

பரமக்குடி-எமனேசுவரம் பகுதியில் முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

DIN

பரமக்குடி-எமனேசுவரம் பகுதியில் முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 பரமக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் ஆதிகரித்து வருவதுடன், அனல் காற்றும் வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
   இந்நிலையில் பரமக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல் இரவு நேரங்களில் முன் அறிவிப்பு ஏதுமின்றி பல மணி நேரம் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் முதியோர், சிறுவர்கள் என பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பல்வேறு தொழில்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் பரமக்குடி பகுதியில் நிலவும் மின்தடையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT