ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுக்குடி கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் கடல் ஆமை கரை ஒதுங்கியது.
சுமாா் 20 கிலோ கொண்ட இந்த ஆமை கரை ஒதுங்கி சில நாள்களாகியிருப்பதால் இப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.