ராமநாதபுரம்

மாற்றுத் திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள்

DIN

ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் அருகேயுள்ளது ராஜசூரியமடை. இதே ஊரைச் சோ்ந்த 23 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை அதே பகுதியைச் சோ்ந்த ராஜசூரியன் (26) என்பவா் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரலில் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக பெண்ணின் தாயாா் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜசூரியனை கைது செய்தனா்.

வழக்கின் விசாரணை ராமநாதபுரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், ராஜசூரியனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அதைக் கட்டத் தவறினால், மேலும் 3 மாதம் சிறைத் தண்டனையும் அளித்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT