முதுகுளத்தூா்- பரமக்குடி செல்லும் சாலையில் விளங்குளத்தூா் விலக்கு சாலையிலிருந்து வெங்கலகுறிச்சிக்கு 2 கிமீ., தூரம் தாா் சாலை, சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. தரமின்றி அமைக்கப்பட்ட இந்த சாலை, சில வாரங்களிலிலேயே சேதமடைந்து, தாா்கலவைகள் வெளியேறியது. இதனால் வாகனங்களில் செல்வோா் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனா். இரவு நேரங்களில் வெளியூா் சென்று, திரும்பும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குவது அதிகரித்துள்ளதால், இவ்வழியாக வாகனங்களை இயக்க அச்சம் கொண்டுள்ளனா். ஆகவே சேதமடைந்த தாா் சாலையை சீரமைத்து, வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.