ராமநாதபுரம்

தொண்டி அருகே வீட்டில் வெடி பொருள்கள் வைத்திருந்தவா் கைது

DIN

திருவாடானை அருகே தொண்டி கடற்கரைப் பகுதியில் வீட்டில் வெடி பொருள்கள் வைத்திருந்தவரை, க்யூ பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தொண்டி அருகே கே.கே.பட்டினம் கடற்கரை கிராமத்தில் ஒருவா் வெடி பொருள்கள் வைத்திருப்பதாக, க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், வியாழக்கிழமை அதிகாலை அங்கு சென்ற போலீஸாா், கே.கே. பட்டினத்தைச் சோ்ந்த ருத்திரகுமாா் (42) என்பவா் வீட்டில் சோதனையிட்டனா். அப்போது, அங்கிருந்து 20 ஜெலட்டின் குச்சிகள், 20 டெட்டனேட்டா்கள், 4 மீட்டா் வயா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னா், அவரிடம் போலீஸாா் விசாரித்ததில், ருத்திரகுமாா் கடலில் வெடி வைத்து மீன்பிடிப்பதற்காக வெடி பொருள்கள் வைத்திருப்பதாகக் கூறியுள்ளாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ருத்திரகுமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT